widget
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...லால்பேட்டை நேசகன் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தங்கள் அழகிய ஆக்கங்களை உலகறியச்செய்யவும், என்னை தொடர்புகொள்ளவும் rila.emailbox@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்...

Tuesday, 14 October 2014

அன்பு மச்சானுக்கு பாராட்டு விழா ..! இதனை

கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா  மாவட்ட பொருளாளராக மவ்லானா மவ்லவி . லால்பேட்டை A.R.ஸலாஹுத்தீன் ஹஜ்ரத் .அவர்களை தேர்வு செய்தனர் ....



அவருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும் ...

மௌலானா அவர்களின் பணி சிறக்க இறைவனிடத்தில் துஆச் செய்கின்றேன்!



அன்பு மச்சானை வாழ்த்தியபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் ....

சீர்மிகு சிறப்பான புகழ்பெற்ற ஊர் லால்பேட்டை..!!

சீர்மிகு சிறப்பான புகழ்பெற்ற ஊர் லால்பேட்டைக்கு சிறு வயதில் சென்று வந்தது மனதில் பசுமையாக உள்ளது .
திரும்பவும் கடந்த ஞாயிறு அன்று எனது பேரன் சமீர் அலியோடு போய் வந்தது மனதில் பெரு மகிழ்வை தருகின்றது .
லால்பேட்டை மக்கள் மிகவும் ஒற்றுமையாக தங்கள் ஊரின் முன்னேற்றதிற்கு பெரும் பங்காற்றுகின்றனர்.
லால்பேட்டையை சுற்றி பார்ப்பதில் நண்பர் அஹ்மது ரிலா அவர்கள் மிகவும் உதவினார்கள் .அங்குள்ள பெரிய பள்ளிவாசலில் தொழுதது மனதிற்கு அமைதியை தந்தது . 



    லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியை பார்த்த பின்பு எனக்கு மிகவும் வேண்டிய தமிழ் மாநில தலைவர் மவ்லானா மவ்லவி ஷைகுல் ஹதீஸ் ஏ.இ.எம். அப்துற்றஹ்மான் ஹஜ்ரத் அவர்களை லால்பேட்டை அவர்களது வீட்டில்  சந்தித்தேன்.
ஹஜ்ரத் அவர்களுடன் சிறு வயதிலிருந்து எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு .அவர்கள் நீடூர் ஜாமியா அரபிக் கல்லூரியில் ஓதியவர்கள் .
அவர்கள் வீட்டுக்கு சென்றபோது அன்புடன் 'ஜின்னா' என்று என் பெயரை அழைத்து கட்டி அணைத்து தனது அன்பைக் காட்டினார்கள் .


லால்பேட்டை அரபிக் கல்லூரியில் Ahamed Rila Mohamed Ali மற்றும் எனது பேரன் சமீர் அலி






அதன் பின்பு லால்பேட்டை ஊரை முழுமையாக பார்த்து வீராணம் ஏரியையும் பார்த்து வந்தோம்
 லால்பேட்டை வீராணம் ஏரி அருகில் Ahamed Rila Mohamed Ali மற்றும் எனது பேரன் சமீர் அலி
— with Ahamed Rila.





லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் கூடத்தில் Mohamed Ali
— with Ahamed Rila.




அஹ்மத் ரிலா இல்லத்தில்
Ahamed Rila Mohamed Ali மற்றும் அஹ்மத் ரிலாவின் தந்தை ஹஜ்ரத், நூருல்லாஹ் அவர்கள்



***********************************************************************

லால்பேட்டை தமிழ் நாட்டில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

ஆற்காடு நவாபுகளின் ஆட்சித்தொடரில் சிறந்த ஆட்சி அமைத்து பற்பல சிறந்த சேவைகளை செய்த அன்வருத்தீன் என்பவரின் அமைச்சரவையில் இருந்த "லால்கான்" என்பவரே இந்த லால்பேட்டை என்ற ஊரை வளர்த்தெடுத்தவர். அமைச்சர் லால்கான் இப்பகுதியில் தங்கி சேவையாற்றியுள்ளார். அவர் தங்கியிருந்த பகுதிக்கு "கான் இருப்பு" எனும் சொல் வழங்கிவந்துள்ளது. அது இன்றும் "காங்கிருப்பு" என அழைக்கப்படுகிறது. இன்னும் அப்பகுதி பாசனத்திற்கென அவர் வீராணத்திலிருந்து கொண்டு வந்துள்ள வாய்க்காலுக்கு "கான் வாய்கால்" என அழைக்கப்படுகிறது.

இப்படியாய் தன் நிர்வாகத்தை இங்கே துவங்கிய லால்கான் தன் குற்றேவலர்களை ஒருபகுதியில் தங்கவைத்துள்ளார். இன்று குற்றேவலர்-கொத்தவால் தெரு என அழைக்கப்படுகிறது. அத்துடன் இதை ஒரு பேரூராக மாற்றியமைக்க முனைந்த லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதை முதன் முதலாக் சிறிய அளவில் நிறுவி அதனை சுற்றி வடக்குதெரு,தெற்குதெரு,கீழத்தெரு,மேலத்தெருவிலும் முஸ்லிம்களை கொண்டுவந்து குடியமர்த்தினார். இதனுடன் கொற்றேவலர்-கொத்தவால்தெருவும் இணைந்திருந்தது.

அத்துடன் பாகு பாடற்ற இஸ்லாமிய உணர்வுள்ள லால்கான் அவர்கள் வீராணக்கரை யோரம் இன்று, சத்திரம்,சாவடி என அழைக்கப்படுகின்ற ஒரு சத்திரம் கட்டி அதன் அருகே கோவில் ஒன்றும் அமைத்து, மேலும் ஒரு குளமும் தோண்டியுள்ளார், அந்த குளம் திருக்குளம் என்று இன்று வரை கூறப்படுகிறது, அதன் நாற்புறத்து கரையிலும் எட்டு ஜாதி மக்களை லால்கான் குடியமர்த்தினார்.

இப்படி ஜாமிஆ மஸ்ஜிதின் பகுதியில் முஸ்லிம்களும் வீராணப்பகுதியில் இந்துக்களும் ஒரே சம காலத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

மத நல்லிணக்கத்தின் உதாரணமாய் விளங்கி வரும் இந்த லால்பேட்டை 1775 ஆம் ஆண்டுக்கு முன்பு லால்கானால் உருவாக்கப்பட்டது 
லால்பேட்டை

நன்றி 
*****************************************************

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று புகழ் பெற்ற, மார்க்க அறிஞர்களை உருவாக்கி அனுப்பும் ஓர் மதரசா லால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார்

இங்கு ஓதி முடித்து பட்டம் பெறுவோர் தனது பெயருக்கு பின்னால் மன்பஈ எனும் வார்த்தையை சேர்த்து கொள்கின்றனர். மன்பஈ என்றால் மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வாரில் ஓதி முடித்து பட்டம் பெற்றவர் என்று பொருள்படும். 
மதரசாவின் சிறப்பம்சம்: இம் மதரசாவில் தங்கி மார்க்க கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் லால்பேட்டையில் உள்ள வீடுகளிலிருந்து மதியம் மற்றும் இரவு உணவு டிபன் கேரியரில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவரையும் தங்கள் வீட்டு பிள்ளைகளைப்போல் கருதுகின்றனர். காலை உணவிற்கு மதரசா நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது.
ழமை வாய்ந்த புகழ்ப்பெற்ற மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு ஆலிம்களையும், ஹாபிஸ்களையும், மார்க்க அறிஞர்களையும் உருவாக்கிடவும், அதன் புகழ் என்றென்றும் குறையாமல் இன்னும் பல புகழ்களைப் பெற முஸ்லிமாகிய நாம் அனைவரும் ஏக அல்லாஹ்விடம் வேண்டுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொண்டு முடிவுரைக்கு திரையிடுகின்றேன். அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).

 லால்பேட்டை ஊரைப்பற்றி
     ஏக அல்லாஹுவின் திருபெயரைக்கொண்டு ஆரம்பிக்கின்றோம் அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) மார்க்க அறிஞர்களை உருவாக்கி உலகமெங்கும் அனுப்பும் வரலாற்று சிறப்புமிக்க ஓர் ஊரை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

லால்பேட்டை ஓர் அறிமுகம்:

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டத்தில் சிதம்பரத்திலிருந்து 22கி.மீ. நெய்வேலியிலிருந்து 30கி.மீ. காட்டுமன்னார்குடிஇலிருந்து 3கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, லால்பேட்டை. லால்பேட்டையின் இயற்ப்பெயர் லால்கான்பேட்டை ஆகும். இந்தபெயர் காலப்போக்கில் மாறி லால்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. பெயர் எப்படி உருவானது என்பதை, லால்பேட்டை உருவானது எப்படி என்ற தலைப்பில் பின்னர் கீழே காண்போம்.

இன்ஷா அல்லாஹ்.

இவ்வூர் முஸ்லிம்கள் அதிக அளவிலும் ஹிந்துக்கள் மற்றும் கிருஸ்தவர்கள் குறைந்த அளவிலும் ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக இருக்கும் ஓர் ஊராகும். லால்பேட்டை சிதம்பரம் நாடாளுமன்ற மற்றும் காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் கீழ்வரும் ஓர் பேரூராட்சியாகும்.

இவ்வூரில் முஸ்லிம்கள்,ஹிந்துக்கள் மற்றும் கிருஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

லால்பேட்டை உருவானது எப்படி:

வெள்ளையர்களின் ஆட்சிகாலத்திலும் அதற்க்கு முன்பும் இந்தியாவில் நவாப்களின் ஆட்சிக்காலம் சிறந்த ஆட்சிகாலம் என்றே சொல்லலாம், அவ்வரிசையில் சிறந்த ஆட்சிப்புரிந்த ஆற்காடு நவாப்களில் குறிப்பிடத்தக்கவர் நவாப் ஜனாப் அன்வருத்தின் ஆவார்.

அவரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஜனாப் லால்கான் எனும் பெயருக்குரிய செல்வமகன் இந்த பகுதிக்கு வருகை தந்தபோது அவருடைய கடைக்கண் பார்வையில் பட்டதுதான் இவ்வூராகும். இவ்வூரை உருவாக்கி நிர்மாணித்த பெருமை இவரையே சேரும்.

அவருடைய வருகைக்கு முன்பு ஒரு சிலரே அங்காங்கே வாழ்ந்து வந்த குக்கிராமங்கலாய் இவ்வூர் இருந்தது என்று கூறப்படுகிறது. லால்கான் வருகைக்கு முன்பு இங்கு ஊரே இல்லையென்றும் கூறப்படுகிறது. இரு வேறு கருத்துகள் கூறப்பட்டாலும் லால்கான் வரவுக்கு பின்னர்தான் இவ்வூர் வளர்ச்சி அடைய ஆரம்பித்தது என்பதை பின்வரும் குறிப்புகளிலிருந்து அறியமுடியும்.

அமைச்சர் லால்கான் இப்பகுதியில் தங்கி மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்றியுள்ளார். இப்பகுதிக்கு “கான்இருப்பு” என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. அந்த பெயர் இன்றும் கூட அப்பகுதிக்கு காங்கிருப்பு என்று அழைக்கப்படுகிறது இப்பகுதியை சிதம்பரத்திலிருந்து லால்பேட்டையை நெருங்கும்போது காங்கிருப்பை காணலாம் இது லால்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும் மேலும் இப்பகுதி விவசாய பாசனத்திர்க்கென லால்கான் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்த வாய்க்களுக்குகூட “கான் வாய்க்கால்” என இன்றும் அழைக்கப்படுகிறது.

அமைச்சர் லால்கான் தன் நிர்வாகத்தை இங்கே துவக்கி இதை ஒரு பேரூராக மாற்ற நினைத்து (லால்கான் ) ஜாமியா மஸ்ஜிதை (தற்போது பெரிய பள்ளிவாசல் என்று அழைக்கப்படும் லால்கான் ஜாமியா மஸ்ஜித் ) கட்டினார். பள்ளிவாசலின் முன்புறம் நான்கு தெருக்களை நிறுவி அதில் முஸ்லீம் மக்களை கொண்டுவந்து குடியமர்த்தி அதற்க்கு மேலதெரு, கீழ தெரு , வடக்கு தெரு, தெற்கு தெரு என பெயரிட்டார் அத்துடன் குற்றே வேலர்கள் என அழைக்கப்பட்ட மக்களை தெற்கு தெருவிற்கு தெற்க்கே குடியமைத்து அதற்க்கு குற்றே வேலர் தெரு எனப் பெயரிட்டார் அது காலப்போக்கில் மாறி கொத்தவால் தெரு என அழைக்கப்படுகிறது.

இவ்வாறாக இஸ்லாமிய வாழ்வு இங்கே வளர ஆரம்பித்தது, இவ்வூரை உருவாக்கி வளரவைத்த அந்த மாபெரும் அமைச்சரின் பெயரே இன்று வரை நிலைத்து நிற்கிறது. அந்த பெயர்தான் லால்(கான்) பேட்டை.

பாகுபாடற்ற இஸ்லாமிய உணர்வு மிக்க லால்கான் அவர்கள் வீராணம் கரையோரம் சத்திரம் சாவடி ஒன்றைக்கட்டி அதன் கரையோரம் கோவில் ஒன்றையும் அமைத்து ஒரு குளமும் தோண்டியுள்ளார் அந்த குளம் திருக்குளம் என்று இந்நாள்வரை அழைக்கப்படுகிறது அதன் கரையோரம் எட்டு ஜாதியினரை குடியமர்த்தினர்

இப்படியாக ஜாமியா மஸ்ஜித் பகுதியில் முஸ்லிம்களும் வீராணம் பகுதியில் ஹிந்துக்களும் ஒரே சமகாலத்தில் குடியமர்த்தி அவர்களின் வாழ்க்கைக்கான தேவைகளும் லால்கானால் வழங்கப்பட்டு வளர ஆரம்பித்த இவ்வூர் இன்று மக்கள் தொகை பெருகி பல தெருக்களும், புதிய நகர்களும் உருவாகி செல்வ செழிப்புடன் ஒரு நகருக்கு இணையான பேரூராய் வளர்ந்து முஸ்லிம்களும் மற்ற மதத்தினரும் ஒன்றாக ஒற்றுமையாக வாளும் ஓர் சிறந்த ஊராகும்

லால்பேட்டை மக்களின் தொழில் மற்றும் வருமாணம்:

லால்பேட்டையில் நெல், உளுந்து, பயறு, கரும்பு, வெற்றிலை ஆகியவை சாகுப்படி செய்யப்படுகிறது, லால்பேட்டை இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் உலகின் பலநாடுகளில் தங்கி பணிபுரிகின்றனர் அதில் குறிப்பாக ஐக்கிய அமிரகம்,சவுதி அரேபியா, மலேசியா,சிங்கப்பூர், கத்தார், குவைத் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளாகும் மத்திய அரசிற்கு அந்நிய செலவாணியை பெற்று தரும் முக்கிய ஊர்களில் லால்பேட்டையும் ஒன்றாகும்.

லால்பேட்டையின் மக்கள் தொகை

லால்பேட்டையின் மக்கள் தொகை சுமார் 20197 (2007 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) இதில் ஆண்கள் சுமார் 54% மற்றும் பெண்கள் சுமார் 46% ஆகும்.

லால்பேட்டையின் சுற்றியுள்ள முஸ்லீம் கிராமங்கள்:

எள்ளேரி, கொள்ளுமேடு , ஆடூர் , கந்தகுமரன், நெடுன்ச்சேரி, ஆயங்குடி.

அருகிலுள்ள ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்கள்:


ரயில் நிலையம் சிதம்பரம் ,


விமானநிலையம் திருச்சி மற்றும் சென்னை.


முடிவுரை:இப்பகுதியை படிக்கும் அனைவரும் லால்பேட்டை மேலும் செழிப்படைந்து பெரிய நகரமாக உருவாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


****************************************

வெளியூர் மக்களை அசைபோடும் லால்பேட்டையின் வெற்றிலை..!!

வெள்ளை வெற்றிலை.இதுகடலூர் மாவட்டம்லால்பேட்டையில் அதிகம் பயிடப்படுகின்றது.வீரணம் ஏரி பாசனத்தால் தண்ணிர்தட்டுப்பாடின்றி,அமோக விளைச்சலைத்தருகிறது.

அசுரவளர்ச்சினால்,விட்டத்திற்கு மேலும் செல்லும்போது வெற்றிலைபறிப்பது கடினம் என்பதால், அந்த கொடியை அப்படியேஎடுத்து வட்டவடிவமாக சுழற்றி பூமியில் வைத்து,அதன் மேல் சேற்றை வைத்து விடுவார்கள்.

தலைப்புக்கொடி மேல் நோக்கி இருக்கும்.சிலநாட்களுக்கு பிறகு இந்த பதியனிலிருந்து பலகிளைகள்கிளம்பும்.

அதுவளந்து பலன் கொடுக்கும் இதனைசுழற்றிக் கட்டுதல் என்று சொல்வர்.

வெள்ளை வெற்றிலையப் பார்த்தாலே அழகு!
மக்கள் மத்திலே வைத்தலே சபை அழகு!
அதைப்போட்டாலே முக அழகு!!!

-அஹமது ரிலா 


ஆக்கம் - நீடுர் முஹம்மது அலி ஜின்னா

http://nblo.gs/10DMO1

Friday, 3 October 2014

அனைவருக்கும் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள் ..!!

ஒப்பற்ற ஓரிறை கொள்கையை உலகில்நிலைநாட்ட, சோதனைகளுக்கு முகம்கொடுத்து, நெருப்பிலிட்டபோதும் ஏகத்துவ தங்கமாய் மின்னியஏந்தல் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தையும் ,
தரணியின் தலைவன் அல்லாஹ்வின் கட்டளையின்படி, தனையனை அறுக்கப்போவதாக தந்தை கூறியபோது, ''இறைவன் நாடினால் பொறுமையாளனாக என்னை காண்பீர்கள்' என்று இறைக்கட்டளைக்குதன் தலை கொடுக்க முன்வந்த தனயன் நபி இஸ்மாயீல்[அலை] அவர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் இந்த தியாகத்திருநாளில்...
உலகமெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதரர-சகோதரிகளுக்கு வாழ்த்தினை தெரிவிப்பதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ், இஸ்லாத்தை நிலைநாட்டும் உயரியபனியில் நபிஇப்ராஹீம்[அலை] அவர்களுக்கு வழங்கிய உள்ள உறுதியையும், தியாக மனப்பான்மையையும் நமக்கும் வழங்கிட, நம்மை அல்லாஹ் பொருந்திக்கொண்டவாழ்க்கை வாழ்ந்திட இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.

வாழ்த்துக்களுடன்,
அஹமது ரிலா (லால்பேட்டை மைந்தன் )

Friday, 5 September 2014

தாழ்மையான மாணவனின்ஆசிரியர் தின வாழ்த்துகள்..!

என்னுடைய வாழ்க்கையின் ஆசான்கள் எத்தனையோ பேரால் தான் கொஞ்சமாவது வாழ்க்கையில் பக்குவப்பட்டிருக்கிறேன் என்பதே சரி. அவர்களில் பலர் கற்றுக்கொண்டே இருப்பதற்கு முடிவில்லை என்று உணர்த்தினார்கள். வாழ்க்கை என்பது பணத்தையும் தாண்டியது என்று சொல்லாமல் சொன்னவர்கள் சிலர். கையை ஓங்காமலே மாணவர்களிடையே மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று சாதித்தவர்கள் சிலர். எந்த வித ஆரவாரமும் இல்லாமல் தான் செய்ய வேண்டியதை செவ்வனேசெய்தவர்கள் சிலர். "வாழ்க்கையில வேற எதையும் சம்பாதிக்கலை. முழுசா கடன். ஆனா,நல்ல பசங்களை சம்பாதிச்சு இருக்கேன் !" என்று நெகிழ்ந்த ஆசிரியரின் அந்த கணத்தில் நானும் உடனிருந்தது எததகைய பேறு ?

"எனக்குத்தெரியல. சொல்லித்தா. கத்துக்கிறேன் !" என்று கற்றுக்கொள்ள எப்பொழுதும் காத்திருக்கும் அந்த கனத்த மனிதரின் மனம் பெருநதி போல தோன்றியது. பல காலம் கடந்த பின்னும் இன்றைக்கு தான் முதல் வகுப்புக்கு நடத்தப்போவது போல தயாரித்து விட்டு வந்த அந்த ஆசிரியர்களை இனி எங்க காண்பேன். "என்னைவிட இது உனக்கு நல்லாத்தெரியுது. நீயே நடத்து." என்று மாணவனாக அமர்ந்து கொண்ட உன்னதர்களை இனி வகுப்பறைகளில் காண முடியாது. பெரிய குறைகள் கல்வி முறையின் மீது இருக்கலாம்,எப்படியெல்லாம் ஆசிரியர்கள் இருக்கக்கூடாது என்று பாடமெடுத்தவர்கள் அநேகம் பேர். ஆனாலும்,கசடுகள் அடியில் தங்கிவிட்டு நல்லன மட்டுமே மனமெல்லாம் நிறைந்து இருக்கிறது. என்னைப்போல பலரின் வாழ்க்கையை வார்த்த எளிய மனிதர்களுக்கு இணையற்ற வணக்கங்கள்  கற்பிக்கும் எல்லாருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்... 

Friday, 22 August 2014

நானும் மெட்ராஸ்வாசி தான் ..!! #MADRAS375

சென்னை என்கிற பெருநகரத்துடன் எனக்கிருக்கும் உறவு ஐந்து வருடங்களாக தொடர்கிறது. சிலதை விட்டுத்தொலைக்கிறோம் என்று சொல்வோம்,அதை இறுதிவரை விடவே முடியாது. மெட்ராஸ் என்கிற இந்த நகரமும் அப்படித்தான். சென்னையில் ஆரம்பகால பயணங்களில் ஒழுங்காக எந்த நிறுத்தத்தில் இறங்கவேண்டும் என்று தெரியாது,இறங்கினாலும் வேறொரு இடத்துக்கு போகவேண்டி இருக்கும். சில சமயம் வேகமாக வாகனங்கள் வரும் சாலையின் நடுப்புறம் வண்டியை நிறுத்துவதை பார்த்து பயந்து அடுத்த ஸ்டாப்பில் போய் இறங்கிய கதைகள் உண்டு. அதனாலேயே முப்பது ரூபாய் பாஸ் எடுத்து பல இடம் சுற்றியிருக்கிறேன்.

சென்னைக்கு வந்ததும் நான் தேடிய முதல் இடம் மெரீனா கடற்கறை. என் கல்லூரியில் நான் கேட்ட அனைவருக்குமே தெரியும் என்றே சொன்னார்கள் நீண்ட சாலைகள் மாலை நேரங்களில் அலைமோதும் மக்கள் வெள்ளம் என அங்கு மொத்தமாக இரண்டே இரண்டு முறை தான் அதை எட்டிப்பார்த்து இருக்கிறேன். அங்கு குதிரை சவாரி செய்த அனுபவமும் உண்டு எனக்கு ...





தெருவோரக்கடைகளை தேடி சென்னையின் சாலையோரக்கடைகள் வழியாக தவங்கிடந்த அந்த நாட்கள்,அங்கே பெருகி ஓடிய சென்னைத்தமிழ் எல்லாமும் நெஞ்சை விட்டு அகலாதது. இரவுகளில் சில நேரம் பேருந்துக்காக காத்துக்கொண்டிருக்கும் பொழுது கனியோ,முறுக்கோ எடுத்து எளியவர்கள் நீட்டுவதை இந்த நகரத்தில் கண்டிருக்கிறேன். தனியாக நகரின் வெளிப்பகுதியில் இருந்து நடந்து வருகிற பொழுது ஏறிக்கொள் என்று முகத்தளவில் முரட்டு சுபாவத்தோடு தெரிபவர்கள் ஏற்றிக்கொள்கிற அற்புதமும் இங்குண்டு. சென்னைவாசி என்கிற உரிமையை சென்னையில் வந்து சேர்ந்துவிட்டு யாரும் கோரலாம். இப்படி இருந்தால் மட்டும் தான் மெட்ராஸ்வாசி என்கிற எந்த வரையறையும் அது வகுத்துக்கொள்வதில்லை. கசடுகள் கலந்து ஓடுகிற கூவம் நதி போல அது எல்லாவற்றையும் தனக்குள் வாங்கிக்கொள்கிறது. அதே சமயம் அதன் ஓரமாக வாழும் வெள்ளந்தி மனிதர்கள் போல அதன் குணம் அற்புதமானது.

இந்த நகரத்தில் இருக்கும் பரபரப்புகள் கொஞ்சம் வித்தியாசமானது. ஓடிவிட வேண்டும்,எதை பிடிக்கிறோம் என்று தெளிவிருந்தாலும் ஓடுகிறவன் பொறுமையாக போக நினைக்கும் நம்மையும் அவர்களின் சுழலில் கூடவே இழுத்து சென்று விடுவார்கள். என் கல்லூரி ஒரு விதிவிலக்கு அது அளவில்லாத பொறுமையை தான் பரிசளித்திருக்கிறது. சென்னையின் முகம் எது ? சென்னை பிரமிப்பதை நிறுத்திக்கொள்ள வெகு சீக்கிரமே சொல்லித்தந்து விடும். அதே போல எதையும் கடந்து போகும் ஒரு தன்மையும் அதற்குண்டு. நேற்றைக்கு இப்படி இருந்த இடமா என்கிற ஆச்சரியத்தை நகர்ந்தபடியே இருக்கும் வாழ்க்கை கட்டமைத்து விடுகிறது.

"இதெல்லாம் ஒரு ஊரா ?" என்பவர்கள் ஒருபுறம். சென்னையின் நெடிய வரலாற்றை கிரிக்கெட்,மால்கள்,சென்ட்ரல் நிலையம் என்று காட்டுவதோடு நிறுத்திக்கொள்கிறவர்கள் இன்னொரு புறம். இங்கே மனிதர்கள் நிரம்பிக்கிடக்கிறார்கள். அவர்கள் புனிதர்கள் இல்லை. நரகர்கள் தான். ஆனால்,ஒவ்வொருவரின் வாசனையும் அலாதியானது. அதில் இருக்கும் அழுக்கின் சுவடுகள் கூட அழகானது. "என்ன நடக்குதுன்னு பார்த்துடுவோம் மாமு !" என்கிற அசட்டைத்தன்மை இந்த ஊரில் உண்டு. செரித்து தின்று விடுகிற பெருநகர்கள் பட்டியலிலும் சேராமல்,தன்னைத் தொலைத்து விடுகிற அபலை நகர்களிலும் சேராமல்,கைகோர்த்து சமயங்களில் மிதித்து ஓடும் இந்த மெட்ராஸ் யாருக்கும் ஒரே மாதிரியான நினைவுகளை தருவதில்லை. ஆனால்,நினைவுகளால் நிறைத்து கைகளை வேறெங்கும் நீட்டாமல் செய்துவிடும் உறவு அது.

கொஞ்சம் ட்ரெயினில் ஏறி பெருங்கடைகளில் நெரிசலில் அமிழ்ந்து ஒரே ஒரு பாதாம் கீர் குடித்து விட்டு,கடற்கரையின் மணல்வெளியில் பரிமாறப்படும் ஊடல்களை கண்டவாறே நகர்ந்துகொண்டு,கையேந்தி பவன்களில் கரம் நனைத்து,மால்களில் அமர்ந்தபடி தூக்கம் தொலைத்து,இரவு வேலைகள் செய்து சக்கரத்தை பின்புறம் செலுத்தியபடி குனிந்து நிமிர்கையில் இங்கே எதுவும் மிஞ்சிருப்பதில்லை. நினைவுகளையும்,சில கண சிலிர்ப்பையும் தவிர ! #MADRAS375

Saturday, 9 August 2014

திருச்சி விமான நிலையத்தில் தொழுகை அறை !!

உலகில் உள்ள முன்னணி விமான நிலையங்களில் ஒன்றாக சென்னைக்கு அடுத்தபடியாக  திருச்சி சர்வதேச விமான நிலையமும் செயல்பட்டு வருகிறது ...



                                        ஆச்சரியத்தில் ஆழ்த்திய பள்ளிவாசல் !!


பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த விமான விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு சென்றுவருகின்றனர்...இவர்களில் பெரும்பாலனவர்கள் கட்டாய கடமையான 5 வேலை தொழுகையை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது .

இங்கு அல்லாஹ்வை வணங்கும் அற்புத பள்ளி ஒன்றை நிறுவியுள்ளனர்... 24 மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த அறையில் சுமார் 10 பேர் வரை ஒரே நேரத்தில் தொழக்கூடிய அளவிற்கு வசதி கொண்ட இடம் அளிக்கப்பட்டுள்ளது ...ஒழு செய்வதற்கு தொழுகை அறையின் உள்ளே குளியல் அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.... இப்பள்ளிக்கு இமாம் மற்றும் மோதினார் கிடையாது அவரவர் தொழுகையை நிறைவேற்றி செல்லும் நிலை.. 

ஆனால் இந்த வளாகத்துக்குள்ளேயே ஒரு பள்ளிவாசல்  இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை.  இந்த பள்ளியில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைகான அழைப்பு விடுக்கபடுவதில்லை..

இது பற்றி அங்கு பணி புரியும் சகோதரர் தெரிவித்தது...

இந்த தொழுகை அறையை  இங்கு பணிபுரியும் ஒருசில இஸ்லாமிய அதிகாரிகளின் முயற்ச்சியால் கோரிக்கை  வைத்து அனுமதி வாங்கி தொழுகை நடத்தி வருகின்றனர்...



ஆகவே அன்பான சகோதர, சகோதரிகளே நம் தொழுகை இறைவனிடம் ஏற்புடையதாக அமையும் வகையில் நாம் தொழுவோம் அதற்காக நிறைய இடங்கள் இந்த விமான நிலையத்தில்  உள்ளது அந்த இடத்தில் நாம் தொழ முயற்ச்சி செய்ய வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

இதைப்போல் அனைத்து விமான நிலையங்கள்,அரசு அலுவலகங்கள்,மருத்துவமனைகள்,பள்ளி ,கல்லூரிகளில் தொழுகை நடைப்பெற முடியாத சூழல் நிலவும் பகுதிகளில் முறச்சி எடுத்து அரசுக்கு கோரிக்கை வைத்து 5 வேலை தொழுகை நடைப்பெறுவதற்கு முயற்ச்சி எடுங்கள்...
புகைப்படம் :- அப்துல் ஹசன் -தோப்புத்துறை 

-லால்பேட்டை அஹமது ரிலா 

Saturday, 2 August 2014

என் வாழ்வை கட்டமைத்ததில் நண்பர்கள் மிக முக்கியமானவர்கள்...!

என் வாழ்வை கட்டமைத்ததில் நண்பர்கள் மிக முக்கியமானவர்கள். 


நான் பேசுகிற பொழுது வராமல் போனாலும்," நீ கலக்கி எடுத்துடுவே மச்சி" என்றே சொல்லி சொல்லி என்னை வார்த்தார்கள். நான் எப்படி ஆடை அணிய வேண்டும்,எப்படி தலைசீவ வேண்டும்,எப்படி தேவையான இடத்தில் மட்டும் வாயைத்திறக்க வேண்டும் என்கிற வகுப்புகளும் இவர்களிடம் தான் எனக்கு கிடைத்தன. எனக்காக என்னென்னவோ செய்த இவர்களுக்கு வார்த்தைகளால் நான் நன்றிகள் சொன்னதில்லை. 

 வரலாற்று நண்பர்கள் போல எனக்கான நண்பர்கள் நீங்கள் என்று இவர்கள் யாரிடமும் சொல்லியிருப்பேன் என்றால் அது போலித்தனம். மச்சி,டேய்,சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள் இது தான் எங்களின் உறவை இன்னமும் அழகானதாக ஆக்குகிறது. 


என்னுடைய எழுத்துக்களை அவர்கள் படிப்பதில்லை. பெரும்பாலான பேச்சுக்களை கேட்பதில்லை. என்னிடம் அவர்களுக்கு என்று பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. ஆனால்,அவர்களுக்கு நான் முக்கியம் ; என் முகம் சுருண்டு போனாலோ,குரலில் ஏதேனும் நடுக்கம் இருந்தாலோ அவர்கள் துடித்துப்போவார்கள். 

எழுத்துப்பணி வேண்டாம் என்றிருந்தவனை உள்ளே இழுத்து வந்தவர்களும் அவர்களே,பேச வராது என்றிருந்தவனை பேச வைத்தவர்களும் அவர்களே. எனக்கு பசி என்று ஒன்று தெரியாமல் இருக்கிறதென்றால் அது என் நண்பர்களால். நான் சிரித்தபடியே முகம் கொண்டிருக்கிறேன் என்றால் என் நண்பர்கள் என் முன் அழாமல் இருப்பதால் தான். அவர்கள் அழுகையை துடைக்க நான் பலமணி நேரம் பேச்சு தவம் கிடந்திருக்கிறேன்.

என்னை நாயகன் போலவே நடத்தி இருக்கிறார்கள் அவர்கள். என்றைக்கும் சண்டைகளை தாண்டி,சொரணைகளை தூக்கி எரிந்து விட்டு உறவுகளுக்கு முக்கியத்துவம் தர கற்றுதந்தவர்கள் அவர்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்பொழுதும் என்னை பார்த்ததும் அன்பால்,வார்த்தைகளால் நிறைக்கும் இவர்கள் இல்லாமல் நான் இப்படி இயல்பாக உணர்வேனா என்று தெரியவில்லை. ஒருமுறை நண்பனொருவன் வெகுகாலம் நான் தனிமையாக உணர்வதை எப்படி உணர்ந்தானோ தெரியாது ; நேரில் வந்து பார்த்து மூன்று மணிநேரம் நேரம் ஒதுக்கி பேசிவிட்டு போகிற பொழுது ,"பேசலைனா நீயெல்லாம் செத்துடுவே மச்சி ! அதான் வந்தேன்."என்றபடி நகர்ந்தான். 


காதலிக்காக அழும் நண்பன்,இனிமேல் மதுவை தொடவே மாட்டேன் என்று உத்தரவாதம் தரும் நண்பன், இரண்டு ஆண்டுகளுக்கு பின் பார்த்தாலும் அன்று போலவே இன்றும் பேசும் நண்பன்,நண்பனின் நண்பனாக காக்கக் விழைவோர்,வயதைக்கடந்து தோழர் என்போர் என்று எத்தனை உறவுகள் நம் வாழ்வில் ? முகமே பார்க்காமல் நண்பனாகி ஓயாத உடல்நலக்குறைவிருந்தாலும் கனவுகளை துரத்தும் அற்புதமான நண்பர்களையும் கண்டிருக்கிறேன். முகங்கள் மறந்தாலும் பாதைகள் தானே முக்கியம் ? 

நள்ளிரவில் மருத்துவமனை கூட்டிப்போன நண்பன்,விடிய விடிய காதலி போல சமூகம் சார்ந்து பேசிய நண்பன்,ஏன் என்றே கேட்காமல் எங்கே கூட்டிப்போனாலும் கூட வரும் நண்பன்,என் நம்பிக்கைகளில் தலையிடாத நண்பன்,என் மீது யாரும் அவச்சொல் சொல்ல விடாத தோழி என்று என்னைச்சுற்றி எத்தனை பேர். எனக்கு எண்ணற்ற நண்பர்களா என்றால் எனக்கு தெரியவில்லை. ஆனால்,எனக்கு இருக்கும் நண்பர்கள் அற்புதமானவர்கள்,அரிதானவர்கள். 


அவர்களையும் நானும்,அவர்கள் என்னையும் குறைகளோடு நேசிக்கிறோம். இதைப்படித்து நாமும் அப்படித்தானே என்று நீங்கள் உணர்வீர்கள் என்றால் நாமும் நண்பரே. நட்பே ஜெயிக்கட்டும். நண்பர்கள் தின வாழ்த்துகள் 
நேசமுடன்- அஹமது ரிலா 

Thursday, 24 July 2014

"பிரியும் தொலைவில் ரமழான்"..!!

பிரியா மனமுடன் என்னை விட்டு
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

பிறை பார்க்கும் ஏக்கத்தை எக்காலமும் எனக்களித்து
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

ஒன்றுக்கு ஏழுநூறு நன்மைகள் எனக்களித்து 
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

பசித்தவனின் பசியை பக்குவமாய் உணர வைத்து
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

பயிற்சி பட்டறையில் பொறுமையை கற்பித்து
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

இரவும் பகலும் இறைவணக்கத்தை அதிகப்படுத்தி
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

அளவில்லா சந்தோஷத்தை நோன்பு திறக்கும்போது எனக்களித்து
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

புனித இரவின் தேடலை புத்துணரவோடு எனக்களித்து
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

இருபத்தி ஒன்பதோ, முப்பதோ என குறையும், நிறையுமாய்
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

உயிர் இருக்குமா அடுத்த ரமழானில் உத்திரவாதம் இல்லாமல்
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..


-அஹமது ரிலா 

Wednesday, 9 April 2014

நானும் எனது தம்பியும் ...!!

சில தினங்களுக்கு முன்பு MH 370 விமானத்தை பற்றிய செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துகொண்டிருந்தேன். 'பைலட்' ஆகவேண்டுமென்று நெடுநாட்களாக சொல்லிக்கொண்டிருக்கும் ஏழு வயது நிரம்பிய எனது தம்பி என்னருகில் வந்தான்.

பாய்  (அண்ணன்) ஃப்ளைட்டுக்கு என்ன ஆச்சி? என்றான்.

கடல்ல விளுந்துச்சான்டா அத தேடிக்கிட்டு இருக்காங்க.

அப்போ பைலட்டையும் காணோமா?

ஆமா.

சில நிமிடங்கள் ஏதோ யோசித்தான். ''நா பைலட் ஆவமாட்டேன் டாக்டர் ஆகப்போறேன்'' என்றான்.

அவன் சொன்ன விதத்தையும், முக பாவனைகளையும் நினைக்க நினைக்க சிரிப்பு தான் வருகிறது.
ஒரு காரியத்தை செய்யும் முன் குழந்தைகளும் கூட சிந்தித்து முடிவெடுக்கிறது என்பதை அறிந்துகொண்டேன்

Saturday, 1 March 2014

சென்னையில் இருக்கும் லால்பேட்டை சகோதரர்களுக்கு அறிய வாய்ப்பு..!! நமது தளத்தில் நேரடி ஒளிபரப்பு..!!

முஸ்லீம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ்சின் தலைமை இமாம் நாளைய தினம் சென்னைக்கு வருகை தார் உள்ளார். பின்னர்மைய்லாப்பூர் பள்ளிவாசல் ஒன்றில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார் .

இந்த நிகழ்ச்சியை மக்கா பள்ளி இமாம் சம்சுதீன் காசிமி தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் இந்த நிகழ்ச்சியை இஸ்லாமியர்கள் பெரும் ஆவலாக எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர் இந்த நிகழ்ச்சியில்பங்குகொள்ள முன்பதிவும் செய்து வருகின்றனர் .

இந்நிலையில் இந்த நிகழ்சியில் நேரலையை நமது தளத்தில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செயபட்டுள்ளன என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...

நேரலை இந்திய நேரப்படி மாலை 6 மணி முதல் ஒளிபரப்ப படும் இந்த நிகழ்ச்சியை கானதவராதீர்கள்!!

சென்னையில் உள்ளவர்கள் இந்தநிகழ்வில் நேரடியாக கலந்துகொள்ள முன் பதிவு அவசியம் விருப்பம் உள்ளவர்கள் இந்த இனைப்பைhttp://ilmi.co/ சொடுக்கி முன்பதிவு செய்து கொள்ளவும்.

www.lalpetnirubar.blogspot.com

Monday, 17 February 2014

வாழ்வை பாழாக்கும் டிவி!!


கவல் தொழில் நுட்பத்தின் தாறுமாறான வளர்ச்சியில் விளையும் நன்மைகள் நீளமானவை என்றால் தீமைகள் அகலமானவை, ஆழமானவை, அழுத்தமானவை என்று சொல்ல வேண்டும். நவீன கண்டுப்பிடிப்புகளில் ஒவ்வொன்றும் பின்னது முன்னதை விட தீமையில் தீவிரமாகவே இருந்திருக்கிறது. ஆனால் டிவி மட்டும் இதில் விதி விலக்கு.


ஏனெனில்., தகவல் தொழில் நுட்பம் தொலைகாட்சியை தாண்டி தொலைதூரம் சென்ற பிறகும் டிவி யின் மூலம் பாவங்கள் பன்மடங்காக பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்குப் பின்னர் வந்த இன்டர்நெட் போன்ற  கண்டுப்பிடிப்புகளின்  பாதிப்புகளை விட டிவி ஆதிக்கத்தின் மூலம் வரும் பாதிப்பின் தாக்கம் தாங்க முடியாததாகவே இருக்கின்றது.


எங்கும் எதிலும் டிவி:


கம்ப்யூட்டர் மற்றும் இணையதளத்தில் நிறைய பயன்பாடுகள் இருக்கின்றன. ஆனால் மக்கள் அதிகமாக தீமைக்காகவே பயன்படுத்துகின்றனர். இணையதளத்தின் மூலம்  இளைஞர்களின் சிந்தனை  சிதறடிக்கப்படுகிறது என்றால்  சின்னத்திரையில்  நான்கு  வயது பிஞ்சுகள் முதல்  என்பது வயது முதியவர்கள் வரை அனைவருடைய வாழ்க்கையும் பாழாகி விடுகிறது.. "இல்லத்தரசிகளை கேட்கவே வேண்டாம்".. 


வீட்டில் மட்டும்மல.. நாம் அதை விட்டும் விலகி ஓடினாலும் தொலைக்காட்சி துரத்திக் கொண்டே வருகிறது.. இல்லை..! கூடவே வருகிறது.

பேரூந்தில் ஏறினாலும் டிவி, பிளாட்பாரத்தில் இறங்கினாலும்  டிவி, சினிமா தியேட்டரிலும் டிவி, டீ கடையிலும் டிவி, பெட்டிக் கடையிலும் டிவி, ஆஸ்பத்திரியில் காத்திருப்போர் அறையில் மட்டுமல்ல சிகிச்சை அறையிலும் ஆட்கொண்டிருக்கிறது இந்த டிவி.

இப்படி எங்கு திரும்பினாலும் சின்னத்திரையே வண்ணமயமாக காட்சியளிக்கிறது.


டிவி ஏன் கூடாது?


உலகச் செய்திகளை தெரிந்துக் கொள்கிறோம். வியாபாரச் செய்திகள், மருத்துவத் தகவல்கள், விஞ்ஞான ஆய்வுகள் பற்றி அறிய தகவல்கபோன்றவற்றை டிவி மூலம் அறிந்துக் கொள்ள முடிகிறதே என்று கேட்பது நாம் காதில் விழுகிறது.


ஸஹர்  நிகழ்சிகள், புனித ஹரம் நிகழ்சிகளை காணுகிறோம் என்ற வாதமும் நமக்குப் புரிகிறது. இவை கூட மார்க்க வரம்பிற்குட்பட்டு  ஒலிக்கப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க இதற்காகத்தான் இன்று டிவி பயன்படுத்தபடுகிறதா? என்பதே கேள்வி.


99% சதவீதம் பேர் சினிமாவுக்காகவும், சீரிய்லுக்ககவும் தான் டிவியை பயன்படுத்துகின்றனர்.


நாய், பூனை போன்ற மிருகங்களின் வாழ்க்கை முறைகளை படமாக்கி காட்டுகிறோம் என்று  கூறிக்  கொண்டு அவை ஒன்றையொன்று  கொஞ்சுவதையும் , புணர்ச்சி செய்வதையும் காட்டுகிறார்களாம்.

கல்வி ஒலிபரப்பு என்ற  சிறப்பு நிகழ்சிகளிலும்  ஆபாசம் நிறைந்து காணப்படுகிறதாம்!

மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள். மதிமயக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை விலை கொடுத்து வாங்குகிறார்கள். அவர்கள் எவ்வித  அறிவுமின்றி   மக்களை அல்லாஹுவின் பாதையை விட்டும் பிறழச் செய்வதற்காகவும் அதை ஏளனம் செய்வதற்காகவும் தான் என்று

குர் ஆன் இத்தகையோருக்கு இழிவுபடுத்தும் வேதனை உள்ளது என்று எச்சரிக்கிறது. (அல் குர் ஆன்  31:6) 

நபியவர்களின் காலத்தில் குர்ஆனை யாரும் கேட்க கூடாது என்பதற்காக ஒருவன் ஒரு பாட்டுப் பாடக் கூடிய ஓர் அடிமைப் பெண்ணை வாங்கி வந்தான்.

குர் ஆணை கேட்காதீர்கள், அதை விட இனிமையாக இருக்கும் இந்த இசையை கேளுங்கள்! என்று ஏளனமாக கூறினான். அவனுக்கு பதிலடியாக இந்த இறைவசனம்  இறங்கியது.(லஹ்வுல் ஹதீஸ் - டிவி)

இவ் வசனத்தில் கூறப்பட்டுள்ள "லஹ்வுல் ஹதீஸ்" என்ற வார்த்தை "மெய் மறக்கச் செய்யும் பேச்சு" மற்றவற்றை மறக்கச் செய்வது மனதை முழுக்க தன பக்கம் ஈர்த்துக் கொள்ளும் விஷயம் என்று பொருள் தரக் கூடிய  கருத்துச் செறிவுள்ள வார்த்தை, இப்படிப்பட்ட பேச்சுக்களை விலைக்கு வாங்குகிறார்கள் எதற்காக?


மக்களை அல்லாஹுடைய மார்க்கத்தை விட்டும் தடுப்பதற்காக  ஷரீஅத்தை ஏளனமாக விலை மதிப்பற்றதாக  ஆகுவதற்காக!


இப்பொழுது சொல்லுங்கள்! குர் ஆன் கூறும் " லஹ்வுல் ஹதீஸ்" என்ற வார்த்தை டிவி யுடன் எப்படி ஒத்துப் போகிறது என்று!


இராக்கதை கூடாது :


 சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குறிப்பாக பெண்கள் சீரியலில் உட்கார்ந்து விட்டால் உலகமே மறந்து போய்விடும். தொழுகையிலும் குர் ஆன் ஓதுவதிலும், திக்ரு செய்வதிலும் கழிய வேண்டிய இரவுகள் இப்படி வீணாகின்றன.


நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகைக்குப் பிறகு இராக்கதை பேச வேண்டாமென்று தடை செய்து இருக்கிறார்கள். (திர்மிதி)


இரவு நேரத்தில் தெருவில் வீணான வெட்டிக் கதை பேசிக் கொண்டிருந்தால் எப்படி ஃபஜ்ர் தொழுகைக்கு எழ முடியும்?


குறிப்பாக இன்று பெரும்பாலும்  டிவியில் தான் இரவின் பெரும் பகுதி கழிகிறது.


கிரிக்கெட் போட்டி நடந்தால் கேட்கவே தேவையில்லை..

இரவு ஒரு மணி, இரண்டு மணி வரை தூக்கத்தை தொலைக்காட்சி முன் தோய்த்து விட்டால் பிறகென்ன? மறு நாள் தொழுகை மட்டுமல்ல உலக வேலையும் கெட்டு விடும்..

ஒரு கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆடுவதால் நமது நாட்டுக்கு ஏற்படும் மனித உழைப்பின் இழப்பின் மதிப்பு 2007-ம்  ஆண்டிலேயே 2000 கோடி என்று மதிப்பிட்டு இருக்கிறார்கள்.


இரவெல்லாம் டிவி க்கு முன்னால் விழித்திருந்தால் பகலில் எப்படி வேலை செய்ய முடியும்?


ஃபஜ்ர் (காலை) நேரத்தில் தூங்கினால் வாழ்வாதாரம் சேதாரம் ஆகிவிடும் என்ற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் உபதேசித்தார்கள். (தர்கீப்)

காலை நேரத்தில் எனது உம்மத்தினருக்கு பரக்கத்- அபிவிருத்தி செய்திடுவாயாக    என்று து ஆ செய்திருக்கிறார்கள்.(அபூதாவுத்)

இந்த நபி மொழியை அறிவிக்கும் ஸக்ர் (ரலி) அவர்கள் காலை நேரத்தில் சுறுசுறுப்பாக வியாபராதை ஆரம்பித்து செழிப்பாக வாழ்ந்தது வரலாறு.. ஆனால் நாமோ.......??? சிந்தியுங்கள்...


(இன்ஷா அல்லாஹ்) இறைவன் நாடினால் வேறொரு தலைப்பில் சந்திப்போம்...