widget
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...லால்பேட்டை நேசகன் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தங்கள் அழகிய ஆக்கங்களை உலகறியச்செய்யவும், என்னை தொடர்புகொள்ளவும் rila.emailbox@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்...

Friday, 25 October 2013

லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் பயின்ற இமாம் பஸ்லுல் ஹக் மன்பயீ அவர்களுக்கு பொன்விழா கண்ட சாதனை இமாம் விருது வழங்கப்பட்டது..........!!

லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் பயின்ற இமாம் பஸ்லுல் ஹக் மன்பயீ அவர்களுக்கு பொன்விழா கண்ட சாதனை இமாம் விருது வழங்கப்பட்டது..........!!

அது ஒரு வித்தியாசமான செய்தியாகவும்விழாவாகவும் இருந்தது.

ஓர் ஊரில், ஒரு பள்ளிவாசலில்,தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள்இமாமாகப் பணியாற்றுவதுஇன்றைய சூழ்நிலையில் ஒரு சாதனைஎன்பதில்எந்த ஐயமும் இல்லை.

அந்த மகத்தான சாதனையைப் படைத்துள்ளார்மௌலானா ஜி.எஸ். பஸ்லுல் ஹக் மன்பயீ அவர்கள்.


ஆம்..! கோட்டாறு இளங்கடை பள்ளிவாசலில்அவர் சேவையாற்றத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைநிறைவு செய்துள்ளார். அவருடைய இந்தச் சாதனையைப்பாராட்டி கண்ணியப்படுத்தும் வகையில்பள்ளிவாசல் நிர்வாகமும் உள்ளூர் மக்களும் இணைந்துபொன்விழாவையே கொண்டாடிவிட்டார்கள்.


விழாவில் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு.

இமாம்களைப் பாராட்டுபவர்கள்பலரும்அவருடைய மார்க்க அறிவு, பேச்சாற்றல், உழைப்பு,தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றைவாயளவில் பாராட்டிவிட்டுச்சென்றுவிடுவார்கள்.

“உங்கள் சேவைக்குமறுமையில் நற்கூலி கிடைக்கும் ஹஜ்ரத்,துஆச் செய்கிறோம்” என்று சொல்லிமெல்ல நழுவிவிடுவார்கள்.

ஆனால் கோட்டாறு இளங்கடை ஜமாஅத்தினர்வாயளவில் பாராட்டியதோடு நின்றுவிடாமல்,இமாம் அவர்களின் ஐம்பதாண்டு சேவையைக்கண்ணியப்படுத்தும் வகையில்பொற்கிழி வழங்கியும் வாழ்த்தியுள்ளனர்.

பொற்கிழி என்றால் ஏதோ ஒரு பத்தாயிரம் இருக்கும்அல்லது அதிகபட்சம் 25,000 ரூபாய் இருக்கும்என்றுதான் நினைத்தேன். ஆனால்மூன்றரை இலட்சம் (3,50,000) ரூபாயைப்பொற்கிழியாக அளித்துஅசத்தியுள்ளார்கள் இளங்கடை ஜமாஅத்தினர்.

மௌலானா அவர்களின் இணையற்ற இறைப்பணிக்குஎத்தனை லட்சம் கொடுத்தாலும் ஈடாகாது என்றாலும்சமுதாயத்தினரால்ஒரு மார்க்க அறிஞர்கண்ணியப்படுத்தப்படுகிறார் என்பதை நினைக்கும்போதுநெஞ்சம் நெகிழ்ந்து, கண்கள ்கசிந்தன.

ஆலிம் பெருமக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகமௌலானா ஜி.எஸ். பஸ்லுல் ஹக் மன்பயீ அவர்கள்திகழ்கிறார் எனில்,பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஜமாஅத்தார்களும்எப்படி இருக்கவேண்டும் என்பதற்குஇளங்கடைப் பகுதி மக்கள்எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.


எல்லா ஊர்களும் இளங்கடைகளாய் இருந்தால்எவ்வளவு நன்றாக இருக்கும்...!

நன்றி:-சிராஜுல்ஹஸன்


நமது கருத்து:

இந்த சாதனை இமாம் அவர்களை மன்பயீ எனும் பட்டத்தை வழங்கி சமுதாயத்துக்கு அளித்தது எங்களது லால்பேட்டையின் ஜாமிஆ மன்பவுல் அன்வார் எனும் இஸ்லாமிய கலாசாலை தான் என்பதில் நாங்களும் பெருமை அடைகிறோம்.

16.01.1962 ஆம் ஆண்டு நடைப்பெற்ற லால்பேட்டை ஜாமிஆ மனபவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் பட்டமழிப்பு விழாவில் மார்க்கமாமேதை அல்லாமா ஜியாவுத்தீன் அஹ்மது அமானி ஹஜ்ரத் பொற்கரங்களால் மவ்லவி ஆலிம் மன்பஈ பட்டம் பெற்ற கோத்தாரி-கோட்டாறு, மவுலவி ஜி.எஸ்.பஜ்லுல் ஹக் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள்.

இளங்கடை ஜமாஅத்தினரால் கௌரவிக்கப்பட்டுள்ள மவ்லவி பஸ்லுல் ஹக் மன்பஈ அவர்கள், எங்கள் ஊரான லால்பேட்டை ஜாமி ஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியில் பயின்றவர் என்ற முறையில், நான் பெருமையும், பெருமிதமும் அடைகிறேன். 150 ஆம் ஆண்டில் அடிஎடுத்து வைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க எங்கள் மதரசா, மவ்லவி பஸ்லுல் ஹக் மன்பஈ போன்றவர்களால் மேலும் சிறக்கும் என்பதில் ஐயமில்லை. வல்ல அல்லாஹ் (ஜல்) கண்ணியத்திற்குரிய ஹஜ்ரத் அவர்களுக்கும், அவர்கள் கல்வி பயில உதவிய எங்களுக்கும், ஒரு நல்ல மார்க்க அறிஞரை கௌரவித்துசமுதாயத்திற்கு முன்னுதாரணம் காட்டியுள்ள இளங்கடை ஜமாஅத்தினருக்கும் ஈருலகிலும்நற்பாக்கியங்கள்தந்தருள்வானாக!

No comments: